கத்தார் பிரதமருடன் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சந்திப்பு

மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் ஆசிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
கத்தார் பிரதமருடன் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சந்திப்பு
Published on

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் கத்தார் பிரதமர் முகமது பின் அப்துல்ரஹ்மான் அல்-தானியை சந்தித்தார். அப்போது எரிசக்தி, வர்த்தகம், முதலீடுகள், இணைப்பு வசதிகள் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து அவர் ஆய்வு செய்தார்.

ஜூலை 5-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை கத்தார், பஹ்ரைன், குவைத் மற்றும் ஓமன் ஆகிய நாடுகளில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

முக்கியத்துவம்:

அமெரிக்கா-ஈரான் இடையிலான மோதலை முடிவுக்கு கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்ட ஒப்பந்தம் கையெழுத்தானதைத் தொடர்ந்து, மேற்கு ஆசியாவில் வேகமாக மாறிவரும் அரசியல் சூழலுக்கு மத்தியில் இந்த வளைகுடா நாடுகளுக்கான பயணம் அமைந்துள்ளது.

கத்தாரில் வசிக்கும் இந்திய சமூகத்தினரின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்ததற்காக கத்தார் பிரதமருக்கு ஜெய்சங்கர் நன்றி தெரிவித்தார்.

எக்ஸ் தள பதவு:

"எரிசக்தி, வர்த்தகம், முதலீடுகள், இணைப்பு வசதிகள், பாதுகாப்பு மற்றும் மக்களிடையேயான உறவுகள் உள்ளிட்ட எங்கள் இருதரப்பு ஒத்துழைப்பின் பல்வேறு அம்சங்களை ஆய்வு செய்தோம். எங்கள் 'மூலோபாயக் கூட்டாண்மையை' மேலும் வலுப்படுத்துவதற்கான புதிய வாய்ப்புகள் குறித்தும் ஆராய்ந்தோம்," என்று ஜெய்சங்கர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

மேற்கு ஆசிய மோதல் மற்றும் அதன் தாக்கம் குறித்த மதிப்பீடுகள் குறித்தும், கத்தாரின் வெளியுறவு அமைச்சராகவும் செயல்படும் பிரதமர் அல்-தானியுடன் ஜெய்சங்கர் விவாதித்தார். அவர் இந்தியச் சமூகத்தின் பிரதிநிதிகளையும் சந்தித்தார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com