

பிரதமர் மோடி 2 நாட்கள் அரசுமுறை பயணமாக நேற்று காலை தனி விமானம் மூலம் பூடான் சென்றார். தலைநகர் திம்புவில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பூடானில் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொண்டார்.
நேற்று சாங்லிமெதாங் மைதானத்தில் நடந்த பூடான் முன்னாள் மன்னர் ஜிக்மே சிங்யே வாங்க்சுக் 70-வது பிறந்தநாள் நிகழ்ச்சியில் பேசும்போது, டெல்லி கார் வெடிப்பு சம்பவம் பற்றி குறிப்பிட்டார்.
இதையடுத்து டெல்லி கார் வெடிப்பில் பலியானவர்களுக்காக அதே மைதானத்தில் பிரார்த்தனை கூட்டம் நடந்தது. பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நாம்கியல் வாங்க்சுக் தலைமையில், ஆயிரக்கணக்கான பூடான் மக்கள் முன்னிலையில் பிரார்த்தனை நடந்தது.
கார் வெடிப்பில் பலியானோர் குடும்பங்களுக்கு பூடான் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் பிரதமர் மோடியின் பூடான் பயணத்தின்போது, டெல்லியில் கார் வெடிப்பு சம்பவத்தில் ஏற்பட்ட உயிரிழப்புக்கு பூடான் மன்னர் இரங்கல் தெரிவித்தார். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
Joint Press Release on the State Visit to Bhutan by PM Narendra Modi - His Majesty The King conveyed the heartfelt condolences of the Royal Government and people of Bhutan on the tragic loss of precious lives in the explosion in Delhi on November 10 and offered prayers for swift… pic.twitter.com/qncdcxQPG5