search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    சிங்கப்பூரில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் மந்திரி ஆனார்
    X

    சிங்கப்பூரில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் மந்திரி ஆனார்

    • வர்த்தக மற்றும் தொழில்துறை மந்திரியாக இருக்கும் கன் யாம் யோங் துணை பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.
    • 56 வயதான அவர் ஜூலை மாதம் 1-ந்தேதி நடக்கும் பதவியேற்பு விழாவில் மந்திரியாக பொறுப்பேற்க உள்ளார்.

    சிங்கப்பூர்:

    சிங்கப்பூர் பிரதமர் லீ சியான் லூங் கடந்த 2004-ம் ஆண்டு ஆகஸ்ட் 12-ந்தேதி பிரதமராக பதவியேற்றார். சுமார் 20 ஆண்டுகள் பிரதமராக இருந்த லீ நாளை (15-ந்தேதி) பதவி விலகுவதாக ஏற்கனவே அறிவித்து இருந்தார்.

    தற்போது துணை பிரதமராக பதவி வகிக்கும் லாரன்ஸ் வோங் நாளை புதிய பிரதமராக பதவியேற்க உள்ளார். இந்நிலையில் மந்திரி சபையில் இடம்பெறுவோர் பெயர்களை அவர் அறிவித்தார். இதில் முந்தைய மந்திரி சபையில் துணை மந்திரிகளாக இருந்த பலருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு உள்ளது. அதன்படி, வர்த்தக மற்றும் தொழில்துறை மந்திரியாக இருக்கும் கன் யாம் யோங் துணை பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    இந்தியா வம்சாவளியை சேர்ந்தவரான முரளி பிள்ளை சட்டம் மற்றும் போக்குவரத்து துறை துணை மந்திரியாக நியமிக்கப்பட்டுள்ளார். 56 வயதான அவர் ஜூலை மாதம் 1-ந்தேதி நடக்கும் பதவியேற்பு விழாவில் மந்திரியாக பொறுப்பேற்க உள்ளார்.

    தற்போது மந்திரிகளாக இருக்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்த விவியன் பாலகிருஷ்ணன், கே.சண்முகம், இந்திராணி ராஜா ஆகியோர் புதிய மந்திரி சபையிலும் தொடர்வார்கள் என லாரன்ஸ் வோங் அறிவித்துள்ளார்.

    Next Story
    ×