சோமாலியாவில் கண்ணிவெடி தாக்குதல்- 10 பேர் உயிரிழப்பு

சோமாலியாவில் கண்ணிவெடி தாக்குதலில் மினிவேனில் பயணித்த 10 பேர் உயிரிழந்தனர்.
குண்டுவெடிப்பு
குண்டுவெடிப்பு
Published on

மொகடிஷு:

சோமாலியாவின் தெற்கு பகுதியில் உள்ள துறைமுக நகரமான கிஸ்மாயோ நகருக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு மினி வேன் சென்றுகொண்டிருந்தது. அப்போது, சாலையில் கிளர்ச்சியாளர்களால் புதைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடியில் சிக்கியது. கண்ணி வெடித்ததால் வேன் முற்றிலும் சிதைந்தது. 

இதில், வேனில் இருந்த 5 பெண்கள், 4 குழந்தைகள் உள்பட 10 பேர் பலியாகினர். 3 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலை அல்-ஷபாப் கிளர்ச்சியாளர்கள் நிகழ்த்தியிருக்கலாம் என தெரிகிறது.

கண்ணிவெடி வெடித்த சமயத்தில், அரசுப் படைகள் அல்-ஷபாப் போராளிகளுடன் சண்டையிட்டுக் கொண்டிருந்தன. கிஸ்மாயோவின் வடக்கு பகுதியில் நடந்த தேடுதல் வேட்டையின்போது இந்த சண்டை ஏற்பட்டது. இதில், பாதுகாப்பு படை தரப்பில் இரண்டு வீரர்கள் காயம் அடைந்ததாகவும், பல போராளிகள் இறந்ததாகவும் ராணுவ கமாண்டர் கூறி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com