புதிதாக உருவாக்கப்படும் அமராவதியில் ரூ.150 கோடியில் ஏழுமலையான் கோவில்

ஆந்திர தலைநகர் அமராவதியில் ரூ.150 கோடியில் ஏழுமலையான் கோவில் கட்ட திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக அக்குழுவின் தலைவர் சுதாகர் யாதவ் தெரிவித்தார். #Tirupati #Amaravati
புதிதாக உருவாக்கப்படும் அமராவதியில் ரூ.150 கோடியில் ஏழுமலையான் கோவில்
Published on

திருப்பதியில் செவ்வாய்க்கிழமை காலை மாதந்தோறும் நடைபெறும் அறங்காவலர் குழுக் கூட்டம் நடந்தது. இதில் தலைவர் சுதாகர் யாதவ், தேவஸ்தான செயல் அதிகாரி அனில்குமார் சிங்கால் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். பின்னர் நிருபர்களிடம் சுதாகர் யாதவ் கூறியதாவது:-

புதிதாக உருவாக்கப்படும் ஆந்திர தலைநகர் அமராவதியில் உள்ள வெங்கடபாளையத்தில் ரூ.150 கோடியில் ஏழுமலையான் கோவில் கட்டப்படுகிறது.

திருமலையில் உள்ள துரித உணவகங்கள், தேநீர் விடுதிகள், சிற்றுண்டி விடுதிகள் உள்ளிட்டவற்றில் உணவுப் பொருள்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதைத் தடுக்க 5 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com