அறந்தாங்கியில் கருணாநிதிக்கு வெண்கலச் சிலை - சொந்த செலவில் அமைக்கிறார் திருநாவுக்கரசர்

திமுக தலைவர் கருணாநிதிக்கு முழு திருவுருவ வெண்கல சிலை நிறுவப்படும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் அறிவித்துள்ளார். #Karunanidhi #Thirunavukkarasar
அறந்தாங்கியில் கருணாநிதிக்கு வெண்கலச் சிலை - சொந்த செலவில் அமைக்கிறார் திருநாவுக்கரசர்
Published on

திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக 11 நாட்கள் காவிரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்ற நிலையில், கடந்த 7-ம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து அவரது இறுதி சடங்குகள் நிறைவுற்று 8-ம் தேதி மாலை அவர் மெரினாவில் உள்ள அண்ணா சமாதி அருகே நல்லடக்கம் செய்யப்பட்டார்.

முதுபெரும் அரசியல் தலைவர் கருணாநிதிக்கு தமிழக மக்களும், தொண்டர்களும் விடிய விடிய அவரது சமாதியில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும், கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை திமுகவின் திருச்சி சிவா முன்வைத்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com