

தமிழக வாழ்வுரிமை கட்சி தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இருந்து விலகுகிறது என்று கட்சியின் தலைவர் வேல்முருகன் அறிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில்,
* நீங்கள் டிமாண்ட் கொடுக்கிற அளவுக்கு இருக்கிறீர்களா என்ற பெரியண்ணன் மனப்பான்மையுடன் அணுகினார்கள்.
* பெரியண்ணன் பாணியில் தி.மு.க. எங்களை கையாள்வதை ஏற்க முடியாது.
* இடங்களுக்காக கூட்டணியில் இருந்து விலகவில்லை.
* இடங்களை விட எங்களின் 10 கோரிக்கைகள் தான் முக்கியம்.
* தி.மு.க. அரசை இயக்குவது ஆர்எஸ்எஸ் சித்தாந்தம் கொண்ட அதிகாரிகள்.
இவ்வாறு அவர் கூறினார்.