இன்னும் பிரசார மூடிலேயே இருக்கிறார் முதலமைச்சர் விஜய் - உதயநிதி

திமுக அரசின் சாதனைகளை தவெக அரசின் சாதனைகளாக ஸ்டிக்கர் ஒட்டி, காப்பி பேஸ்ட் அரசாக மாறி உள்ளது.
Udhayanidhi Stalin - CM Vijay
Published on

தமிழ்நாடு சட்டப்பேரவையின் 17வது கூட்டம் தமிழ்த்தாய் வாழ்த்துடன் இன்று தொடங்கி, தமிழக ஆளுநர் அர்லேகர் உரையை வாசித்தார்.

தமிழ்நாடு அரசு கொடுத்த உரையை அப்படியே மாற்றமின்றி சட்டசபையில் ஆளுநர் அர்லேகர் வாசித்தார்.

தலைமைச் செயலகத்தில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆளுநர் உரை குறித்து கருத்து தெரிவித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* ஒரு மாதத்தில் 175 பாலியல் வன்கொடுமைகள் நடந்துள்ளன.

* கண்ணாடியை பார்த்து பேசி கொண்டிருக்கிறார் முதலமைச்சர் விஜய்.

* இன்று நடைபெறும் குற்றச்செயல்களில் ஆளுங்கட்சியினரே ஈடுபடுகின்றனர்.

* நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றி இருக்கிறார்கள்.

* முதல்வன் என்றாலே மு.க.ஸ்டாலின் பெயர் நினைவுக்கு வரும் என்பதால் பெயரை மாற்றி உள்ளனர்.

* உண்மையான பிரச்சனைகளை பற்றி முதலமைச்சர் எப்போது பேசுவார்.

* திமுக அரசின் சாதனைகளை தவெக அரசின் சாதனைகளாக ஸ்டிக்கர் ஒட்டி, காப்பி பேஸ்ட் அரசாக மாறி உள்ளது.

* தமிழக அரசின் சாதனைகளாக ஆளுநர் வாசித்தது கடந்த 30 நாளில் தவெக அரசு செய்த சாதனையா?

* மாற்றம் என ஆட்சிக்கு வந்தார்கள், மாட்டிக்கிட்டோம் என பொதுமக்கள் கூறுகிறார்கள்.

* இன்னும் பிரசார மூடிலேயே உள்ளார் முதலமைச்சர். மாநிலத்தில் நடக்கும் பிரச்சனைகளுக்காக கொஞ்சம் வாய் திறங்கள்.

* முதலமைச்சர் தான் எப்போதாவது பேசுவார் என்றால் அமைச்சர்களும் அப்படித்தான் இருக்கிறார்கள்.

* பீரோ புல்லிங் போல் அதிமுக எம்எல்ஏக்களை புல்லிங் செய்து வருகிறார் முதலமைச்சர் விஜய்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com