

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் விஜய் தலைமையிலான தவெக 108 தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆனால் ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மையை பெறவில்லை.
இதனைத்தொடர்ந்து போதிய பெரும்பான்மை குறித்த ஆதாரங்களைச் சமர்ப்பிக்கும் வரை பதவியேற்பு விழாவுக்கு அழைப்பு விடுக்க முடியாது எனத் தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தெரிவித்தார்.
இதனையடுத்து திமுக கூட்டணியில் இடம்பெற்ற இடதுசாரி கட்சிகளிடம் ஆதரவைக் கோரியது தவெக. இதில் காங்கிரஸ் முதல் ஆளாக திமுக உடனான கூட்டணியை முறித்துக்கொண்டு, தவெகவிற்கு ஆதரவை வழங்கியது. மேலும் இனிவரும் அனைத்து தேர்தல்களையும் தவெகவுடனே நின்று வெல்வோம் எனவும் தெரிவித்தது.
காங்கிரஸ் இணைந்ததும் தவெக எண்ணிக்கை 113 ஆக உயர, ஆட்சியமைக்க இன்னும் 6 தொகுதிகள் தேவைப்பட்டது.
இதனைத்தொடர்ந்து சிபிஐ, சிபிஎம், விசிக கட்சிகளிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திவந்தது தவெக. இக்கட்சிகள் கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசித்தே முடிவு கூறப்படும் எனக்கூறிய நிலையில் இழுபறி நீடித்து வந்தது.
இந்நிலையில் இந்த மூன்று கட்சிகளும் தங்களது ஆதரவை தவெகவிற்கு வழங்கியுள்ளன. ஆதரவுக் கடிதங்களையும் வழங்கின. இதன்மூலம் தவெகவின் கூட்டணி எண்ணிக்கை 119ஆக உயர்ந்துள்ளது.
இந்த ஆதரவு கடிதங்களுடன், விஜய் இன்று மாலை ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரைச் சந்தித்து மீண்டும் ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.