என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    விசில் அடித்து இடையூறு செய்த தவெகவினர்... செங்கோட்டையன் கொடுத்த ரியாக்ஷன்!
    X

    விசில் அடித்து இடையூறு செய்த தவெகவினர்... செங்கோட்டையன் கொடுத்த ரியாக்ஷன்!

    • தவெகவினர் விசில் அடித்து இடையூறு செய்தனர்.
    • தவெக நிர்வாகிகள் விசில் அடிக்கவேண்டாம் என்று கேட்டுக்கொண்டனர்.

    தவெக கட்சிக்கு தேர்தல் ஆணையம் விசில் சின்னம் ஒதுக்கியுள்ளது. இதையடுத்து தவெக செயல் வீரர்கள் கூட்டத்தில் பேசிய செங்கோட்டையன், "நமக்கு கிடைத்திருப்பது விசில் சின்னம். நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தூங்கிக் கொண்டிருப்பவர்கள் காதில் விசில் அடித்து விடாதீர்கள். ஓட்டு போய்விடும். வயதாகி தடுமாறிக் கொண்டிருக்கும் பெரியவர்களிடத்தில் விசில் அடித்தால் அவர் தடுமாறி போய்விடுவார். எனவே விசிலை பொறுத்தவரை எச்சரிக்கையாக இருக்க வேண்டும்" என்று கூறியது பரபரப்பி ஏற்படுத்தியது.

    இந்நிலையில், ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் த.வெ.க. நிர்வாகக் குழுத் தலைவர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது தவெகவினர் விசில் அடித்து இடையூறு செய்தனர். அப்போது அங்கிருந்த நிர்வாகிகள் விசில் அடிக்கவேண்டாம் என்று கேட்டுக்கொண்டனர். ஆனாலும் தொடர்ந்து தவெகவினர் விசில் அடித்து இடையூறு செய்தனர்.

    அப்போது பேசிய செங்கோட்டையன், "விசில் அடிச்சிட்டு போகட்டும் விடுங்க... ஒன்னும் பண்ண முடியாது போயிடலாம் வாங்க... விசில் அடிக்கிறதை நிறுத்த மாட்டாங்க... என்று கிண்டலாக தெரிவித்தார்.

    Next Story
    ×