நாளை மாலை 3 மணிக்கு பதவி ஏற்க ஆளுநரிடம் நேரம் கேட்டார் த.வெ.க. தலைவர் விஜய்

தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் 120 தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுடன் ஆளுநரை 4-வது முறையாக சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
நாளை மாலை 3 மணிக்கு பதவி ஏற்க ஆளுநரிடம் நேரம் கேட்டார் த.வெ.க. தலைவர் விஜய்
Published on

தமிழக வெற்றிக் கழகத்திற்கு காங்கிரஸ், இரண்டு இடது சாரிகள், விசிக, ஐ.யு.எம்.எல். ஆதரவு அளித்துள்ளதால் ஆட்சி அமைப்பதற்கான 118 இடங்களை தாண்டி 120 இடங்கள் கிடைத்துள்ளன. இதனைத் தொடர்ந்து இன்று இரவு 4-வது முறையாக ஆளுநர் அர்லேகரை சந்தித்து, ஆதரவு கடிதங்களை வழங்கி ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கக்கோரி அழைப்பு விடுத்தார்.

அப்போது நாளை மாலை 3 மணிக்கு பதவி ஏற்க விஜய் நேரம் கேட்டுள்ளார். ஆளுநர் இந்த நேரத்திற்கு சம்மதம் தெரிவித்தால் விஜய் முதலமைச்சராக பதவி ஏற்பார். அவருடன் சில அமைச்சர்களும் பதவி ஏற்க வாய்ப்புள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com