நெரிசலை தவிர்க்க பயணத் திட்டங்களை மாற்றுங்கள்- பொது மக்களுக்கு போக்குவரத்துத்துறை வேண்டுகோள்

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், விழுப்புரம் கோட்டம் சார்பாக சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.சிறப்பு பேருந்து இயக்கத்தினை பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
நெரிசலை தவிர்க்க பயணத் திட்டங்களை மாற்றுங்கள்- பொது மக்களுக்கு போக்குவரத்துத்துறை வேண்டுகோள்
Published on

பொங்கல் பண்டிகையை முடித்து சென்னை திரும்பும் மக்கள் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க பயணத் திட்டங்களை மாற்றிக் கொள்ளுங்கள் என்று பொது மக்களுக்கு போக்குவரத்துத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுகுறித்து போக்குவரத்துத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

பொங்கல் பண்டிகையை முடித்து பயணிகள் சென்னை மற்றும் பிற ஊர்களுக்கு திரும்பிச்செல்ல ஏதுவாக 17.01.2025, 18.01.2025, 19.01.2025, 20.01.2025 ஆகிய நான்கு நாட்கள் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (விழுப்புரம்) லிமிடெட், விழுப்புரம் கோட்டம் சார்பாக சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

19.01.2025 அன்று பொதுமக்கள் அதிக அளவில் பயணிக்க வாய்ப்பு உள்ளதால் அன்றைய தினத்தில் கூட்ட நெரிசலை தவிர்த்திடும் பொருட்டு பொதுமக்கள் தங்களின் பயணத்தை முன்கூட்டியே 17.01.2025 மற்றும் 18.01.2025 ஆகிய தேதிகளில் திட்டமிட்டு இந்த சிறப்பு பேருந்து இயக்கத்தினை பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com