என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    சென்னையில் நாளை (15.05.2025) மின்தடை ஏற்படும் இடங்கள்...
    X

    சென்னையில் நாளை (15.05.2025) மின்தடை ஏற்படும் இடங்கள்...

    • காலை 9 மணி முதல் மதியம் 2 மணி மின் தடை செய்யப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
    • சன்னதி தெரு, ராம்தாஸ் நகர், சின்ன கோலடி, திருவேங்கடம் நகர், அன்பு நகர், செல்லியம்மன் நகர், தேவி நகர் உள்ளிட்ட பகுதிகள்.

    சென்னை:

    சென்னையில் நாளை பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் மதியம் 2 மணி மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

    தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    சென்னையில் நாளை (15.05.2025) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

    அதன்படி, எழும்பூர் பகுதிகளான சைடன்ஹாம்ஸ் சாலையின் ஒரு பகுதி, டெப்போ தெரு, பி.டி.முதலி தெரு, சாமி பிள்ளை தெருவின் ஒரு பகுதி, ஏ.பி. சாலை, ஹண்டர்ஸ் லேன், ஜெனரல் காலின்ஸ் சாலை, மேடெக்ஸ் தெரு, வி.வி. கோவில் தெரு, குறவன் குளம், சுப்பஹா நாயுடு தெரு, நேரு ஸ்டேடியம் (வெளிப்புறம் மற்றும் உட்புறம்), அப்பாராவ் கிருஷ்ணா தெரு, ஆண்டியப்பன் தெரு, ஆண்டியப்பன் முதலி தெரு, சூளை பகுதி, கே.பி.பார்க் பகுதி, பெரம்பூர் பேராக்ஸ் சாலை, ரோட்லர் தெரு, காளத்தியப்பா தெரு, விருச்சூர்முத்தையா தெரு, டாலி தெரு, மாணிக்கம் தெரு, ரெங்கையா தெரு ஒரு பகுதி, அஸ்தபுஜம் சாலை ஒரு பகுதி, ராகவா தெரு ஒரு பகுதி. பரிவாக்கம் பகுதியில் காவலன்சேரி, திருமணம் சிடுகாடு, திருக்கோவில்பத்து.

    திருவேற்காடு: தேரோடும் வீதி, சன்னதி தெரு, ராம்தாஸ் நகர், சின்ன கோலடி, திருவேங்கடம் நகர், அன்பு நகர், செல்லியம்மன் நகர், தேவி நகர், காவேரி நகர், சீனிவாசா நகர், அருள் நகர், நடசேனர் நகர், பாரதிநகர், லட்சுமி நகர் பிரிவு I மற்றும் II.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×