

மே 1ம் தேதியான இன்று உழைப்பாளர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதை முன்னிட்டு, பல்வேறு கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-
உழைப்பினால் உலகை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லும் உழைப்பாளர்கள் அனைவருக்கும் என் 'மே தின' வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உழைப்பின் மகத்துவத்தைப் போற்றுவோம் - போராடி வென்றெடுத்த உழைப்பாளர் உரிமைகளை என்றும் பாதுகாப்போம்!
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.