TN Assembly Election | ஏப்.23-ந்தேதி ஊதியத்துடன் விடுமுறை: தேர்தல் ஆணையம் உத்தரவு

வாக்குப்பதிவுக்கான பணிகளில் தேர்தல் ஆணையம் மும்முரமாக பணியாற்றி வருகிறது.
TN Assembly Election | ஏப்.23-ந்தேதி ஊதியத்துடன் விடுமுறை: தேர்தல் ஆணையம் உத்தரவு
Published on

தமிழக சட்டசபைக்கு அடுத்த மாதம் 23-ந்தேதி அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி தேர்தல் நடத்தை விதிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் அமலில் உள்ளன. இதனை தொடர்ந்து வாக்குப்பதிவுக்கான பணிகளில் தேர்தல் ஆணையம் மும்முரமாக பணியாற்றி வருகிறது.

இந்த நிலையில், தமிழக சட்டசபை தேர்தல் நாளில் தொழிலாளர்கள், பணியாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறையை வழங்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. வாக்களிக்க தகுதியுள்ள அனைவரும் தவறாது ஓட்டுப்போட வேண்டும் என்பதை முன்னிலைப்படுத்தும் விதத்தில் தேர்தல் ஆணையம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

கேரளா, புதுச்சேரி, அசாம் ஆகிய மாநிலங்களில் அடுத்த மாதம் 9 தேதியும், மேற்கு வங்கத்தில் ஏப்ரல் 23,29 ஆகிய தேதிகளில் விடுமுறை வழங்க உத்தரவிட்டுள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com