TN Assembly Election | பொதுமக்களின் பணம் பறிமுதல் செய்யப்படுமா? - தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்

TN Assembly Election | பொதுமக்களின் பணம் பறிமுதல் செய்யப்படுமா? - தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்
Published on
Summary

தமிழக சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. உரிய ஆவணம் இருந்தால் பணம் பறிமுதல் செய்யப்படாது என்று தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் கூறினார்.

தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23-ந்தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. வேட்புமனு தாக்கல் வருகிற 30-ந்தேதி தொடங்கி, அடுத்த மாதம் 6-ந்தேதி வரை நடைபெற உள்ளது. ஓட்டு எண்ணிக்கை மே 4-ந்தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், 2026 சட்டசபை தேர்தல் தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க தகுந்த விழிப்புணர்வு அளிக்கப்படும்.

* 2,106 பறக்கும் படை வீரர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவர்.

* வேட்பு மனுத்தாக்கல் செய்ய அனுமதிக்கப்பட்ட 7 நாளில் 5 நாள் தான் மனுத்தாக்கல் செய்ய முடியும். மற்ற 2 நாள் விடுமுறை நாட்கள்.

* உரிய ஆவணம் இருந்தால் பணம் பறிமுதல் செய்யப்படாது. பொதுமக்களுக்கு தொந்தரவு ஏற்படாது.

* நகை வாங்க கொண்டு செல்லப்படும் பணம் உங்களுடையது தான் என்பதை நிரூபிக்க வேண்டும்.

* தமிழ்நாட்டில் 5.67 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com