என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மண்ணுயிர் காப்போம் திட்டத்தில் இதுவரை 21.35 லட்சம் விவசாயிகள் பயன்பெற்றுள்ளனர் - எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்
- உழவர்களுக்கு 53 லட்சம் தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டுள்ளன.
- 2025-26-ம் ஆண்டில் 12.45 லட்சம் ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
சட்டசபையில் தமிழ்நாடு அரசின் 2026-2027-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்த நிலையில் வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:
* 58 ஆயிரம் ஏக்கர் தரிசு நிலங்கள் விளை நிலங்களாக மாற்றப்பட்டுள்ளன.
* உழவர்களுக்கு 53 லட்சம் தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டுள்ளன.
* உணவு உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கத்தில் அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
* கோவை நம்மாழ்வார் இயற்கை வேளாண் ஆராய்ச்சி நிலையம் இயற்கை வேளாண்மை குறித்து ஆய்வில் ஈடுபட்டு வருகிறது.
* 10,588 சிறு பாசன குளம், ஊரணி, கால்வாய் தூர்வாரி மேம்பாடு செய்யப்பட்டுள்ளது.
* நெல் ஜெயராமன் திட்டத்தில் 900 மெ.டன் பாரம்பரிய நெல் விதைகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
* மண்ணுயிர் காப்போம் திட்டத்தில் இதுவரை 21.35 லட்சம் விவசாயிகள் பயன்பெற்றுள்ளனர்.
* 70 ஆயிரம் விவசாயிகளுக்கு நெல் விதைகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன.
* 482 கோடியில் குறுவை சாகுபடி திட்டம் செயல்படுத்தப்பட்டு 19.51 லட்சம் விவசாயிகள் பயன்பெற்றுள்ளனர்.
* மரங்களை வெட்டி எடுத்துச்செல்லும் விதிகளை தளர்த்தும் வகையில் புதிய கொள்கை அறிமுகப்படுத்தப்படும்.
* 2025-26-ம் ஆண்டில் 12.45 லட்சம் ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
* கடந்த ஆண்டை விட 3 லட்சம் ஏக்கர் கூடுதலாக குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
* வேளாண் துறையில் இளைஞர்களை தொழில் முனைவோராக்க ரூ.4.56 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளன.
* உரம் விதைகளை வழங்க ஆயிரம் உழவர் நல சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
* எண்ணெய் வித்து பயிர்கள் சாகுபடி பரப்பளவை அதிகரிக்க ரூ.229 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* பாரம்பரிய உணவுகளை காக்க 20.80 லட்சம் ஊட்டச்சத்து தளைகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
* கேழ்வரகு உற்பத்தியில் தமிழ்நாடு நாட்டிலேயே முதல் இடத்தில் உள்ளது. உணவு தானிய உற்பத்தியை அதிகரிப்பதே இலக்கு.
* விவசாய தொழிலாளர்களின் பற்றாக்குறையை சரி செய்ய 77,000-க்கும் மேற்பட்ட வேளாண் இயந்திரங்கள் விவசாயிகளுக்கு தரப்பட்டுள்ளது.
* பழம், காய்கறி பரப்பு சாகுபடியை விரிவாக்கம் செய்ய அரசு ஊக்குவிக்கிறது.
* கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் கம்பு சாகுபடி பரப்பளவு 1.33 லட்சம் ஏக்கராக அதிகரிக்கப்பட்டுள்ளது.
* தமிழ்நாடு சிறுதானிய இயக்கம் மூலம் 12.84 லட்சம் விவசாயிகள் ரூ.175 கோடி நிதி பெற்றுள்ளனர்.
* துவரை சாகுபடி விரிவாக்க இயக்கம் மூலம் ரூ.66 கோடியில் 2.55 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.






