வெள்ளை அறிக்கை விவகாரம்: த.வெ.க. அரசுக்கு சவால் விட்ட தங்கம் தென்னரசு

மத்திய அரசு தரவேண்டிய நிதிகள் குறித்து வெள்ளை அறிக்கையில் பேசாதது ஏன்? என்று கேள்வியெழுப்பியுள்ளார்.
தங்கம் தென்னரசு
Published on

தி.மு.க. முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

* தமிழக வெற்றிக்கழக அரசின் இயலாமையை மூடிமறைக்கும் யுக்தியாக வெள்ளை அறிக்கை உள்ளது.

* வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது என்பதை உணர்ந்து தப்பிப்பதற்காக வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

* 15 ஆண்டுகளை எடுத்துக்கொண்டு 2021-ல் வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டது.

* 5 ஆண்டுகளை மட்டும் எடுத்துக்கொண்டு தமிழக வெற்றிக்கழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட்டது ஏன்?

* முந்தைய ஆட்சிகள் பற்றி வெள்ளை அறிக்கையில் இல்லாதது யாரை காப்பாற்ற முயற்சி?

* என்ன சொல்லி தப்பித்து கொள்வது என்பது தான் வெள்ளை அறிக்கையின் நோக்கம்.

* நிதியமைச்சர் வெளியிட்ட வெள்ளை அறிக்கை என்பது வெற்று அறிக்கை.

* சட்டமன்றத்தில் விளக்கம் அளித்த பின்னரும் அதே பல்லவியை பாடியிருக்கிறது வெள்ளை அறிக்கை.

* புதிய திட்டங்களை தற்போதைய சூழலில் இல்லை என தமிழக வெற்றிக்கழக அரசு வெள்ளை அறிக்கையில் கூறுகிறது.

* கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாது என எடுத்த எடுப்பிலேயே த.வெ.க. கூறுகிறது.

* ஆளுநர் உரையில் புதிய திட்டங்களை சொல்வதற்கு வாய்ப்பில்லை என்கிறது த.வெ.க.

* தமிழகத்தின் கடன் இரண்டு மடங்காக முந்தைய ஆட்சிகளிலும் உயர்ந்துள்ளது.

* தொடர்ச்சியாக அனைத்து ஆட்சிகளிலும் கடன் இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது.

* த.வெ.க. 5 ஆண்டுகள் ஆட்சியை முடித்தால் தமிழகத்தின் கடன் ரூ.20 லட்சம் கோடியாக இருக்கும்.

* நாங்கள் வாங்கிய கடனை விட த.வெ.க. குறைவாக வாங்கினால் பொறுப்பை ராஜினாமா செய்கிறேன்.

* குஜராத்தில் மக்கள் நலத்திட்டங்கள் என்று எதுவும் கிடையாது.

* தமிழகத்தில் மக்கள் நலத்திட்டங்கள் பல செயல்படுத்தப்படுகின்றன.

* சிங்கப்பெண் திட்டத்திற்கான நிதி மூலதன செலவில்தான் வருகிறதா?

* திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை நிறுத்துவதற்கு பணி நடக்கிறது. மூலதன செலவில் நடைபெறும் திட்டங்களை நிறுத்தி வருகிறது த.வெ.க. அரசு.

* மத்திய அரசு தரவேண்டிய நிதிகள் குறித்து வெள்ளை அறிக்கையில் பேசாதது ஏன்? என்று கேள்வியெழுப்பியுள்ளார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com