அரசு பேருந்தில் சேர்ந்த குப்பைகளை சுத்தம் செய்த பெண்ணுக்கு குவியும் பாராட்டு

கடந்த 25 நாட்களாக குப்பை கூளங்களுடன் அரசு பேருந்து ஒன்று பயணம் மேற்கொண்டு வந்தது.வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானதை தொடர்ந்து அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
அரசு பேருந்தில் சேர்ந்த குப்பைகளை சுத்தம் செய்த பெண்ணுக்கு குவியும் பாராட்டு
Published on

தமிழ்நாடு அரசு பேருந்துகளில் தினமும் லட்சக்கணக்கானோர் பயணம் மேற்கொள்கின்றனர். பண்டிகை காலங்களில் முன்பதிவு செய்தும் பயணத்தை மேற்கொள்கின்றனர். இப்படி லட்சக்கணக்கானோர் பயணிக்கும் பேருந்துகளை சிலர் சுத்தம் செய்து இயக்குவர். சிலர் அப்படியே இயக்குவர்.

இந்த நிலையில், அரசு பேருந்தில் சேர்ந்த குப்பைகளை பெண் பயணி ஒருவர் சுத்தம் செய்யும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

நெல்லை மாவட்டத்தில் கடந்த 25 நாட்களாக குப்பை கூளங்களுடன் அரசு பேருந்து ஒன்று பயணம் மேற்கொண்டு வந்தது. இந்த குப்பைகளை காண பொறுக்காமல் தனது வீடு போல நினைத்து பயணி மாஞ்சோலை தமிழரசி சுத்தம் செய்தார். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானதை தொடர்ந்து அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com