ஜனநாயகத்திற்கு எதிரான கட்சி தி.மு.க.- தம்பிதுரை எம்.பி. பேட்டி

அ.தி.மு.க. ஜனநாயக முறைப்படி இயக்கும் ஒரு இயக்கம்.ஊழல், குடும்ப அரசியல் ஈடுபட்டு வரும் தி.மு.க.வை அகற்ற பாடுபட்டு வருகிறோம்.
ஜனநாயகத்திற்கு எதிரான கட்சி தி.மு.க.- தம்பிதுரை எம்.பி. பேட்டி
Published on

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரியில் இன்று அ.தி.மு.க. எம்.பி. தம்பிதுரை இன்று நிருபர்களை சந்தித்து பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தி.மு.க. என்பது ஊழல், அராஜக அரசியல், குடும்ப அரசியல். இதைத்தான் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள தி.மு.க. ஊழல் குற்றச்சாட்டுகளாக வெளியிட்டுள்ளார். இது ஒன்றும் புதிதல்ல. ஆகவே, இதற்கு முடிவுகட்ட வேண்டும் என்பதுதான் அ.தி.மு.க. கொள்கை.

இதற்காகதான் எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை உருவாக்கினார். அதில் ஜெயலலிதா அரசியல் வாரிசாக வந்தார். அதன் பிறகு சாதராண விவசாய குடும்பத்தில் பிறந்த எடப்பாடி பழனிசாமி. முதலமைச்சரானார். அ.தி.மு.க.வில் குடும்ப அரசியல் கிடையாது.

அ.தி.மு.க. ஜனநாயக முறைப்படி இயக்கும் ஒரு இயக்கம். ஊழலுக்கே புகழ் பெற்றது தான் தி.மு.க. கட்சியாகும். ஸ்பெக்ட்ரம் ஊழல், பூச்சி கொல்லி ஊழல், சர்க்காரிய கமிஷன் ஊழல் ஆகிய ஊழல்களை செய்த கட்சி தி.மு.க. என்று நாட்டு மக்களுக்கு நன்றாக தெரியும்.

எதிர்க்கட்சியாக இருந்தபோது தி.மு.க. அராஜகத்தில் எவ்வாறு ஈடுபட்டனரோ, அதேபோல் ஆட்சிக்கு வந்தபோதும் அவர்கள் அராஜகத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஜனநாயகத்திற்கு எதிரான கட்சியாகவும் ஊழல் மிகுந்த கட்சியாகவும் தி.மு.க. செயல்பட்டு வருகிறது.

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி நல்ல கூட்டணி அமைப்பார்.

ஊழல், குடும்ப அரசியல் ஈடுபட்டு வரும் தி.மு.க.வை அகற்ற பாடுபட்டு வருகிறோம்.

கருணாநிதி, அவரது மகன் மு.க.ஸ்டாலின், அவருக்கு பிறகு உதயநிதி ஸ்டாலின் என தொடர்ச்சியாக முதலமைச்சர் என்ற அஸ்தஸ்து பெற குடும்பமாக செயல்பட்டு வருவது இந்தியாவிலேயே ஒரே கட்சி தற்போது ஆண்டு கொண்டிருக்கின்ற தி.மு.க. தான். இது ஜனநாயகாத்திற்கு முரணாக செயலாகும். இதற்கு முன்பு ஆண்டாக ஆட்சியில் ஊழல் செய்தவர்கள் என்பது தி.மு.க.வை தான் அண்ணாமலை குறிப்பிட்டு இருப்பார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com