இதுவரை இல்லாத அளவில் பயணம்- தீபாவளி சிறப்பு பஸ்கள் முன்பதிவில் புதிய சாதனை

சிறப்பு பஸ்கள் மூலம் 5.76 லட்சம் பேர் பயணம் செய்து இருந்தனர்.பல்வேறு நகரங்களில் இருந்து இந்த பஸ்கள் சென்னைக்கு வர உள்ளன.
இதுவரை இல்லாத அளவில் பயணம்- தீபாவளி சிறப்பு பஸ்கள் முன்பதிவில் புதிய சாதனை
Published on

சென்னை:

தீபாவளி பண்டிகை முடிந்து பொதுமக்கள் சென்னை திரும்புவதற்காக 12,846 பஸ்கள் இன்று முதல் இயக்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகையையொட்டி லட்சக்கணக்கான மக்கள் அவரவர் சொந்த ஊர்களுக்கு சென்றிருந்தனர். இதையொட்டி தமிழக அரசு போக்குவரத்து துறை 28-ந்தேதியில் இருந்து 30-ந்தேதி வரை சிறப்பு பஸ்களை இயக்கியது. சிறப்பு பஸ்கள் மூலம் 5.76 லட்சம் பேர் பயணம் செய்து இருந்தனர்.

இந்த நிலையில் தீபாவளி பண்டிகையை முடித்து விட்டு இன்று முதல் அவரவர் ஊர்களில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் புறப்பட்டு சென்னைக்கு திரும்புவார்கள்.

இதனை கருத்தில் கொண்டு 12,846 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. குறிப்பாக பல்வேறு நகரங்களில் இருந்து இந்த பஸ்கள் சென்னைக்கு வர உள்ளன.

இந்த சிறப்பு பஸ்களில் பயணம் செய்ய இன்று ஒரே நாளில் 75 ஆயிரத்துக்கும் அதிகமான பயணிகள் முன்பதிவு செய்துள்ளதாக போக்குவரத்து துறை செயலாளர் பணீந்திர ரெட்டி தனது சமூக வலைதள பதிவில் தெரிவித்துள்ளார்.

பயணிகள் கடைசி நேர கூட்ட நெரிசலில் பயணிப்பதை தவிர்த்து தங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு tnstc.in அல்லது TNSTC அதிகாரப்பூர்வ மொபைல் செயலியை பயன்படுத்தி முன்பதிவு செய்து பயணிக்க வேண்டும் என்றும் அதில் பதிவிட்டுள்ளார். இந்த முன்பதிவு இதுவரை இலலாத ஒரு புதிய சாதனையாக பார்க்கப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com