ஆம்ஸ்ட்ராங் வழக்கு.. தமிழக டிஜிபிக்கு பட்டியல் சமூகத்திற்கான தேசிய ஆணையம் நோட்டீஸ்

செய்திகள் அடிப்படையில் தாமாக முன் வந்து பட்டியல் சமூகத்திற்கான தேசிய ஆணையம் வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது. தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனாவுக்கும் பட்டியல் சமூகத்திற்கான தேசிய ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
Armstrong
Published on

சென்னை:

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த வெள்ளிக்கிழமை இரவு 6 பேர் கொண்ட கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் என பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என குற்றம்சாட்டினார்.

இந்நிலையில், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவம் தொடர்பாக தமிழக டி.ஜி.பி.க்கு பட்டியல் சமூகத்திற்கான தேசிய ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

செய்திகள் அடிப்படையில் தாமாக முன் வந்து பட்டியல் சமூகத்திற்கான தேசிய ஆணையம் வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது.

ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? விசாரணை நிலவரம் குறித்து ஆணையம் விளக்கம் கேட்டுள்ளது.

மேலும், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனாவுக்கும் பட்டியல் சமூகத்திற்கான தேசிய ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com