

தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த மாதம் (ஏப்ரல்) 23-ந் தேதி ஒரே கட்டமாக நடந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணியில் இருந்து எண்ணப்பட்டு வருகின்றன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. இதைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
தற்போதைய நிலவரப்படி சென்னையில் மொத்தம் உள்ள 16 தொகுதிகளில் த.வெ.க. முன்னிலையில் உள்ளது. தமிழ்நாட்டில் தற்போதுவரை 100 தொகுதிகளில் தவெக முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில் விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்ட பிரேமலதா பின்னடைந்துள்ளார். த.வெ.க. முன்னிலையில் உள்ளது.