மாணவி பாலியல் வன்கொடுமை - போராட்டம் - சமாதானப்படுத்த முயன்ற போலீசார் மீது தாக்குதல்

மாணவிக்கு போதைப்பொருள் கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக கூறப்படுகிறது. சமாதானப்படுத்த முயன்ற போலீசாரை மாணவர் அமைப்பினர் தாக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மாணவி பாலியல் வன்கொடுமை - போராட்டம் - சமாதானப்படுத்த முயன்ற போலீசார் மீது தாக்குதல்
Published on

சென்னை:

சென்னை தரமணி அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு நேர்ந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான வாலிபர் நண்பர்களுடன் சேர்ந்து பாலிடெக்னிக் கல்லூரி மாணவிக்கு போதைப்பொருள் கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவி ரத்த காயத்துடன் விடுதிக்கு வந்ததாக கூறப்படுகிறது.

மேலும் மாணவிக்கு நேர்ந்த கொடுமையை கல்லூரி நிர்வாகம் மூடி மறைக்க முயற்சி செய்ததாக SFI மாணவர் அமைப்பினர் புகார் கூறியுள்ளனர். இதனிடையே, பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவி கல்லூரியில் இருந்து நீக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த SFI மாணவர்கள் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்து சமாதானப்படுத்த முயன்ற போலீசாரை மாணவர் அமைப்பினர் தாக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com