என்கவுண்டரில் 2 ரவுடிகள் சுட்டுக்கொலை: பொன்னேரி உதவி கலெக்டர் ஐஸ்வர்யா நேரில் விசாரணை

முத்துசரவணன், சண்டே சதீஷ் ஆகிய இரு ரவுடிகள் தலைமறைவாகி இருந்தனர்.பொன்னேரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், துப்பாக்கி சூடு நடத்திய தனிப்படை போலீசாரிடம் விசாரணை நடத்தினார்.
என்கவுண்டரில் 2 ரவுடிகள் சுட்டுக்கொலை: பொன்னேரி உதவி கலெக்டர் ஐஸ்வர்யா நேரில் விசாரணை
Published on

திருவள்ளூர்:

திருவள்ளூர் மாவட்டம், பாடியநல்லூர் ஊராட்சியின் முன்னாள் தலைவர் பார்த்திபன்(53) கடந்த ஆகஸ்டு 17- ந்தேதி பாடியநல்லூர் பகுதியில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தபோது, மர்ம கும்பலால் அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

இந்த கொலையில், முத்துசரவணன், சண்டே சதீஷ் ஆகிய இரு ரவுடிகள் தலைமறைவாகி இருந்தனர். இதையடுத்து, அவர்கள் இருக்கும் இடம் அறிந்து கடந்த மாதம் 12-ந் தேதி அதிகாலை போலீசார் சுற்றி வளைத்தபோது அவர்கள் துப்பாக்கியால் சுட்டனர்.

அதனால் காவல் அதிகாரிகள், தற்காப்புக்காக சுட்டதில், முத்துசரவணன் சண்டே சதீஷ் இருவரும் உயிரிழந்தனர். இதுகுறித்து உரிய விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டு இருந்தது.

இந்நிலையில், பொன்னேரி உதவி கலெக்டர் ஐஸ்வர்யா, நேற்று முன்தினம், மாரம் பேட்டில் என்கவுண்டர் நடந்த இடத்தை நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். பிறகு, அவர், பொன்னேரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், துப்பாக்கி சூடு நடத்திய தனிப்படை போலீசாரிடம் விசாரணை நடத்தினார்.

இதில், உதவி கலெக்டர் ஐஸ்வர்யா, பூந்தமல்லி காவல் உதவி ஆணையர் ஜவஹர், காவல் ஆய்வாளர்கள் ரமேஷ், சாய் கணேஷ், உதவி ஆய்வாளர் அசோக், காவலர்கள் கிருஷ்ண மூர்த்தி, ராஜேஷ், பிரபு ஆகியோரிடம் தனித்தனியே விசாரணை நடத்தி, அவர்களை அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com