என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    சென்னையில் மழை தொடரும்- தனியார் வானிலை ஆர்வலர் கணிப்பு
    X

    சென்னையில் மழை தொடரும்- தனியார் வானிலை ஆர்வலர் கணிப்பு

    • சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் நேற்று இரவு முழுவதும் நல்ல மழை பெய்துள்ளது.
    • ஈசிஆர், ஓஎம்ஆர் பகுதிகளில் மழை நின்ற பிறகு மத்திய மற்றும் வடசென்னையில் மழை மெதுவாக குறையும்.

    தென்மேற்கு வங்கக்கடலில் நேற்று உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு நோக்கி நகர்ந்த நிலையில் தமிழகத்தை நெருங்கியது. காற்றழுத்த தாழ்வு பகுதி வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா கடற்கரையை ஒட்டியுள்ளது. இதனால் நேற்று இரவு முதல் தொடர்ந்து சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

    இந்நிலையில் சென்னையில் மழை தொடரும் என்று தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில்,

    சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் நேற்று இரவு முழுவதும் நல்ல மழை பெய்துள்ளது. குறிப்பாக தென் சென்னையில் சற்று கூடுதலாக மழை பதிவாகி உள்ளது.

    சீரான மழை சுமார் 2 மணி நேரம் தொடரும். சில இடங்களில் சீரான மழையும், சில இடங்களில் விட்டு விட்டும் மழை பெய்யக்கூடும்.

    ஈசிஆர், ஓஎம்ஆர் பகுதிகளில் மழை நின்ற பிறகு மத்திய மற்றும் வடசென்னையில் மழை மெதுவாக குறையும்.

    மீண்டும் இன்று இரவு முதல் நாளை காலை வரை மழை தொடரும். பூண்டி, செம்பரம்பாக்கம் நீர்பிடிப்பு பகுதிகளிலும் மழையை எதிர்பார்க்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×