நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 2வது நாளாக இன்றும் உயர்த்தப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு
Published on

கடந்த 4 ஆண்டுகளாக பெட்ரோல்-டீசல் விலையில் பெரிய மாற்றம் இல்லாமல் இருந்தது. 2022-ம் ஆண்டில் ஏற்றம் கண்டது போல மீண்டும் வீரியம் கொண்டு விஸ்வரூபம் எடுத்து இருக்கிறது. முன்புபோல் அடிக்கடி விலை உயர்வை காணத்தொடங்கியுள்ளது.

அதாவது மேற்காசியப் போரின் விளைவால் ஈரான் மூடிய ஹார்முஸ் நீரிணையால் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டு இப்போது அதன் விலை தாறுமாறாக உயர்ந்து கொண்டே வருகிறது.

கச்சா எண்ணெய் விலை உயர்வால், இந்திய எண்ணெய் நிறுவனங்கள் பெரும் இழப்பை சந்தித்து வந்தன. இந்த இழப்பை ஈடுசெய்ய மத்திய அரசு கலால் வரியை குறைத்தும், இழப்பு ஈடாகவில்லை.

இழப்பை ஈடுசெய்ய பெட்ரோல்-டீசல் விலை கடந்த 15-ந்தேதியில் இருந்து ஏற தொடங்கியுள்ளது. அன்றைய தினம் பெட்ரோல் லிட்டருக்கு 3 ரூபாய் 6 காசும், டீசல் 3 ரூபாய் 8 காசும் உயர்ந்தது.

அதன் தொடர்ச்சியாக கடந்த 19-ந்தேதி பெட்ரோல் 74 காசும், டீசல் 78 காசும் அதிகரித்தது. தொடர்ந்து 3-வது முறையாக கடந்த 23-ந்தேதி பெட்ரோல் 80 காசும், டீசல் 85 காசும் உயர்ந்து காணப்பட்டது.

இதனைத்தொடர்ந்து 4-வது முறையாக நேற்று பெட்ரோல் லிட்டருக்கு 2 ரூபாய் 46 காசும், டீசல் லிட்டருக்கு 2 ரூபாய் 57 காசும் அதிகரித்து, ஒரு லிட்டர் பெட்ரோல் 107 ரூபாய் 77 காசுக்கும். டீசல் 99 ரூபாய் 55 காசுக்கும் விற்கப்பட்டது.

கடந்த 10 நாட்களில் பெட்ரோல், டீசல் விலை 5வது முறையாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில், நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 2வது நாளாக இன்றும் உயர்த்தப்பட்டுள்ளது.

அதன்படி, நாடு முழுவதும் தொடர்ந்து 2வது நாளாக இன்று பெட்ரோல் லிட்டருக்கு 34 காசுகளும், டீசல் லிட்டருக்கு 23 காசுகளும் உயர்த்தப்பட்டுள்ளது.

சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 34 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ. 108.01க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் டீசல் லிட்டருக்கு 23 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ. 99.78க்கு விற்பனை செய்யப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com