

மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் காரணமாகவும், ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து இன்னும் சீராகாத காரணத்தாலும் எரிபொருள் தட்டுபாடு மற்றும் எரிபொருள் விலை உயர்வு என்பது உலகம் முழுவதும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது.
அந்த வகையில், இந்தியாவில் கடந்த மே 15-ந்தேதி பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, இன்று மீண்டும் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி உள்ளன.
சென்னையில் பெட்ரோல் விலை லிட்டர் 87 பைசா அதிகரித்து ரூ.104.49-க்கு விற்பனையாகிறது. டீசல் விலை லிட்டருக்கு 91 காசுகள் அதிகரித்து ரூ.96.11 ஆக விற்பனையாகிறது.
கடந்த 4 நாட்களில் லிட்டருக்கு ரூ.4 வரை பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது.