பெட்ரோல் - டீசல் விலை மீண்டும் உயர்வு

இன்று மீண்டும் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி உள்ளன.
பெட்ரோல் - டீசல் விலை மீண்டும் உயர்வு
Published on

மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் காரணமாகவும், ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து இன்னும் சீராகாத காரணத்தாலும் எரிபொருள் தட்டுபாடு மற்றும் எரிபொருள் விலை உயர்வு என்பது உலகம் முழுவதும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது.

அந்த வகையில், இந்தியாவில் கடந்த மே 15-ந்தேதி பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, இன்று மீண்டும் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி உள்ளன.

சென்னையில் பெட்ரோல் விலை லிட்டர் 87 பைசா அதிகரித்து ரூ.104.49-க்கு விற்பனையாகிறது. டீசல் விலை லிட்டருக்கு 91 காசுகள் அதிகரித்து ரூ.96.11 ஆக விற்பனையாகிறது.

கடந்த 4 நாட்களில் லிட்டருக்கு ரூ.4 வரை பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com