கடைகளில் இன்று முதல் விற்பனை: ஆவின் பன்னீர், பாதாம் பவுடர் விலை திடீர் உயர்வு

தனியார் பாலை விட ஆவின் பால் விலை குறைவாக கிடைப்பதால் உடனுக்குடன் விற்று தீர்ந்து விடுகிறது.சென்னையில் உள்ள ஆவின் ஏஜென்சிகள் பார்லர்களில் இந்த விலை உயர்வு இன்றே நடைமுறைக்கு வந்தது.
கடைகளில் இன்று முதல் விற்பனை: ஆவின் பன்னீர், பாதாம் பவுடர் விலை திடீர் உயர்வு
Published on

சென்னை:

தமிழக அரசின் பொதுத் துறை நிறுவனமான ஆவின் பால் மற்றும் பால் பொருட்களுக்கு பொது மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு உள்ளது. தனியார் பாலை விட ஆவின் பால் விலை குறைவாக கிடைப்பதால் உடனுக்குடன் விற்று தீர்ந்து விடுகிறது.

கடந்த ஆண்டு பால் பொருட்களின் விலையை உயர்த்தியது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பாதாம் பவுடர் மற்றும் பன்னீர் விலை கிலோவுக்கு ரூ.100 உயர்த்தப்பட்டது. தற்போது மேலும் விலையை திடீரென உயர்த்தி உள்ளது. ஆவின் பால் பொருட்கள் உற்பத்தி செலவு தொடர்ந்து அதிகரித்து வருவதால் வருவாய் இழப்பு கூடி வருகிறது. இதனால் தவிர்க்க முடியாத காரணத்தால் ஆவின் பன்னீர், பாதாம் விலை இன்று முதல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

ஒரு கிலோ பன்னீர் ரூ.450-ல் இருந்து ரூ.550 ஆக உயர்ந்துள்ளது. அரை கிலோ பன்னீர் ரூ.300 ஆகவும் (ரூ.50 அதிகரிப்பு) 200 கிராம் பன்னீர் ரூ.100-ல் இருந்து ரூ.120 ஆகவும் கூடியுள்ளது. இதேபோல பாதாம் மிக்ஸ் 200 கிராம் பாட்டில் ரூ.100-ல் இருந்து ரூ.120 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் உள்ள ஆவின் ஏஜென்சிகள் பார்லர்களில் இந்த விலை உயர்வு இன்றே நடைமுறைக்கு வந்தது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com