பழனி பஞ்சாமிர்தத்திலும் விலங்கு கொழுப்பு..? ராதாகிருஷ்ணன் விளக்கம்

எத்தோஸ் 6.0 என்ற தலைப்பில் 3 நாள் சர்வதேச கருத்தரங்கு நடைபெற்றது.மருத்துவ நெறிமுறைகளும், அதைக் கொண்டு செல்லும் விதம் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
பழனி பஞ்சாமிர்தத்திலும் விலங்கு கொழுப்பு..? ராதாகிருஷ்ணன் விளக்கம்
Published on

சென்னை வேலப்பன்சாவடியில் உள்ள ஏ.சி.எஸ் மருத்துவக் கல்லூரியில் எத்தோஸ் 6.0 என்ற தலைப்பில் 3 நாள் சர்வதேச கருத்தரங்கு நடைபெற்றது.

டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழக வேந்தர் ஏ.சி.சண்முகம் தலைமையில் நடைபெற்ற இந்த கருத்தரங்கை தமிழ்நாடு கூடுதல் தலைமைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். 

இதில், மருத்துவ நெறிமுறைகளும், அதைக் கொண்டு செல்லும் விதம் குறித்தும் விவாதிக்கப்பட்டது. பிறகு, நிகழ்ச்சியில் கூடுதல் தலைமைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் பேசினார்.

அவர் பேசியதாவது:-

நாட்டின் கொரோனா தொற்றுக்கு பின் அடுத்தடுத்து பல்வேறு நோய்த் தொற்றுகள் அதிகரித்து வருகிறது. அதனை தடுக்க வேண்டிய கடமை மருத்துவத்துறையை சார்ந்தவர்களுக்கு இருக்கிறது. 

தற்போது தொழில்நுட்பங்கள் வளர்ந்து வரும் நிலையில் மூத்த மருத்துவர்களின் அனுபவத்தைப் பெற்றுக் கொண்டு இளம் மருத்துவர்கள் அடுத்தடுத்து மருத்துவத் துறையில் புதிய கண்டுப்பிடிப்புகளைக் கொண்டு வரவேண்டும்.

மருத்துவ நெறிமுறைகளை கொண்டு செல்லும் விதம் குறித்தும் தற்போது உள்ள நிலைமையில் எவ்வளவு முன்னேற்றம் வந்தாலும் வரவேற்க வேண்டும்.

மாணவர்களின் ஆராய்ச்சிகள் வருங்கால மருத்துவத்தில் வரவேற்றகதக்க ஒன்று. பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்படுவதாக எழும் புகார் முற்றிலும் தவறு. இதுப்போன்ற வதந்திகளை நம்ப வேண்டாம்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com