எழும்பூர் ரெயில் நிலையத்தில் செயல்படாத நகரும் படிக்கட்டுகள் இயங்கின- பயணிகள் மகிழ்ச்சி

5 முதல் 9-வது வரையிலான நடைமேடைகளில் உள்ள நகரும் படிக்கட்டுகளும் பல நேரங்களில் நகராமல் தான் நிற்கின்றன. நடைமேடைகளில் இருந்து நடை மேம்பாலத்திற்கு நகரும் படிக்கட்டுகளில் ஏறி எளிதாக பயணித்தனர்.
எழும்பூர் ரெயில் நிலையத்தில் செயல்படாத நகரும் படிக்கட்டுகள் இயங்கின- பயணிகள் மகிழ்ச்சி
Published on

சென்னை:

சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தின் மேற்கு பகுதியில், பயணிகள் வெளியில் இருந்து நேரடியாக நடைமேம்பாலத்தில் ஏறும் வகையிலும், இறங்கும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ள 2 நகரும் படிக்கட்டுகளும் பெரும்பாலான நேரங்களில் நகராமல் நிற்பதால் பயணிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.

அதே போன்று, 5 முதல் 9-வது வரையிலான நடைமேடைகளில் உள்ள நகரும் படிக்கட்டுகளும் பல நேரங்களில் நகராமல் தான் நிற்கின்றன. மேலும், 10-வது நடைமேடையில் உள்ள நகரும் படிக்கட்டும், ரெயில் நிலையத்தின் பின்பகுதியில் கிழக்குப்பகுதி நடைமேம்பாலத்திற்கு செல்வதற்கான நகரும் படிக்கட்டும் நீண்ட நாட்களாக இயங்காமல் பராமரிப்பு இன்றி கிடக்கின்றன.

இதனால், பயணிகள் கடும் அவதி அடைகின்றனர் என்று 'தினத்தந்தி' பத்திரிகையில் நேற்று முன்தினம் செய்தி வெளியிடப்பட்டது.

இந்த நிலையில், எழும்பூர் ரெயில் நிலையத்தின் பின்பகுதியில் கிழக்குப்பகுதி நடைமேம்பாலத்திற்கு செல்வதற்கான நகரும் படிக்கட்டு ஒன்றைத் தவிர அனைத்து நகரும் படிக்கட்டுகளும் நேற்று முறையாக இயக்கின. இதனால், நகராமல் நின்ற நகரும் படிக்கட்டுகள் நகர்வதைப் பார்த்த ரெயில் பயணிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்ததுடன், நடைமேடைகளில் இருந்து நடை மேம்பாலத்திற்கு நகரும் படிக்கட்டுகளில் ஏறி எளிதாக பயணித்தனர்.

எழும்பூர் ரெயில் நிலையத்தின் பின்பகுதியில் கிழக்குப்பகுதி நடைமேம்பாலத்திற்கு செல்வதற்கான நகரும் படிக்கட்டானது, அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட இருப்பதால் அந்த ஒரு நகரும்படிக்கட்டு மட்டும் பின்னர் செயல்படும் என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com