தமிழகத்தில் இன்று வேட்புமனு தாக்கல் நிறைவு

கடைசிநாள் என்பதால் வேட்புமனு தாக்கல் செய்ய கட்சிகள் தீவிரமாக உள்ளன.
தமிழகத்தில் இன்று வேட்புமனு தாக்கல் நிறைவு
Published on

தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற ஏப்ரல் 23-ந்தேதி நடக்கிறது. மே 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

தேர்தலை முன்னிட்டு மார்ச் 30ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் இன்று பிற்பகல் 3 மணியுடன் வேட்புமனு தாக்கல் நிறைவாகிறது.

கடைசிநாள் என்பதால் வேட்புமனு தாக்கல் செய்ய கட்சிகள் தீவிரமாக உள்ளன.

தமிழகத்தின் இதுவரை 3,430 வேட்புமனுக்கள் தாக்கல், 698 பெண்கள், ஒரு மூன்றாம் பாலினத்தவர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

234 தொகுதிகளிலும் வேட்புமனுக்கள் நாளை பரிசீலனை செய்யப்படுகிறது. முழுமையடையாத, தவறான தகவல் அடங்கிய மனுக்கள் நிராகரிக்கப்படுகிறது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com