

மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட புதிய எம்பிக்கள் பதவியேற்று வருகின்றனர்.
அந்த வகையில், தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவைக்கு திமுக சார்பில் தேர்வு செய்யப்பட்ட திருச்சி சிவா மீண்டும் பதவி ஏற்றுக்கொண்டார்.
கான்ஸ்டண்டைன் ரவீந்திரன் மாநிலங்களவை உறுப்பினராக பதவி ஏற்றுக்கொண்டனர்.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட கிறிஸ்டோபர் திலக் பதவியேற்றுக் கொண்டார்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தேமுதிக பொருளாளர் சுதீஷ் ஆகியோர் எம்.பி.க்களாக பதவியேற்றுக் கொண்டனர்.
அதிமுக சார்பில் மு.தம்பிதுரை நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்று கொண்டார்.
பதவியேற்ற புதிய எம்பிக்களுக்கு மாநிலங்களவைத் தலைவர் சி.ப.ராதாகிருஷ்ணன் வாழ்த்து தெரிவித்தார்.