திருவண்ணாமலையில் ரூ.25 கோடி மதிப்பு நவபாஷாண முருகன் சிலை பறிமுதல்

இரண்டு சிலைகளையும் மத்திய வனவிலங்கு குற்றத் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.சிலையை கடத்தி வந்தது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டு வனத்துறையினரிடம் ஒப்படைப்பு.
திருவண்ணாமலையில் ரூ.25 கோடி மதிப்பு நவபாஷாண முருகன் சிலை பறிமுதல்
Published on

திருவண்ணாமலையில் ரூ.25 கோடி மதிப்பு நவபாஷாண முருகர் சிலை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்த நவபாஷாண முருகர் சில 10 கிலோ எடை கொண்டது என தகவல் வெளியாகியுள்ளது.

இதேபோல், ரூ.35 லட்சம் மதிப்பிலான ஒரு அடி உயர கொண்ட யானை தந்தத்தினால் செய்யப்பட்ட கிருஷ்ணர் சிலை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இரண்டு சிலைகளையும் மத்திய வனவிலங்கு குற்றத் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும், சிலையை கடத்தி வந்தது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com