

பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழகத்தையே உலுக்கிய கோவை சிறுமியின் பாலியல் வன்கொடுமை மற்றும் படுகொலையின் ரணம் ஆறும் முன்னே, மீண்டும் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி கடும் அதிர்ச்சியளிக்கிறது. பாதிக்கப்பட்ட சிறுமி முழு மன மற்றும் உடல் நலத்துடன் விரைவில் குணமடைந்து இக்கொடூரத்தை கடந்து வர நாம் அனைவரும் துணை நிற்போம்.
தனக்கு ஓட்டுப் போடுமாறு பெற்றோர்களை நச்சரியுங்கள் என எந்தக் குழந்தைகளை ஜோசப் விஜய் தூண்டி விட்டாரோ, நான் தான் உங்கள் தாய்மாமன் என சென்டிமென்ட் வசனம் பேசி எந்தக் குழந்தைகளுக்கு ஜோசப் விஜய் அவர்கள் தூண்டில் போட்டாரோ, அந்தக் குழந்தைகள் தான் தினசரி ஒரு பாலியல் மிருகத்திடம் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருப்பதை அவர் வேடிக்கை பார்ப்பது மலினமான குணாதிசயம்.
இவ்வாறு தனது ஆட்சியில் நடக்கும் எந்தப் பிரச்சினைகளையும் கண்டு கொள்ளாமல், "மற்றொரு பொம்மை" போல முதல்வர் அரியணையில் அமர்ந்திருக்கும் ஜோசப் விஜய் அவர்களுக்கு தமிழகத்தை ஆள என்ன தகுதி இருக்கிறது?
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.