என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

வயக்காட்டில் WWE சண்டை போட்ட மாமியார் - மருமகள்...
- வாய்தகராறு முற்றி ஒருவரையொருவர் ஆபாசமான வார்த்தைகளால் திட்டிக்கொண்டு கொடூரமாக தாக்கிக்கொண்டனர்.
- இவர்களது சண்டையை அங்கிருந்தவர்கள் தடுக்க முயன்றும் அவர்கள் தொடர்ந்து தாக்கிக் கொண்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் பகுதியில் மாமியார்-மருமகள் ஆகியோர் சண்டையிட்ட வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
லாடவரம் மதுரா கொள்ளுமேடு பகுதியை சேர்ந்தவர்கள் சக்கரவர்த்தி- சின்னபாப்பா தம்பதி. இவர்களது 2 மகன்களுக்கும் திருமணம் ஆகி தனித்தனியே வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் சின்னபாப்பா தனது விளைநிலத்தில் அமர்ந்திருந்த நிலையில், மூத்த மருமகள் ராஜேஸ்வரியுடன் வாய்தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வாய்தகராறு முற்றி ஒருவரையொருவர் ஆபாசமான வார்த்தைகளால் திட்டிக்கொண்டு கொடூரமாக தாக்கிக்கொண்டனர்.
இவர்களது சண்டையை அங்கிருந்தவர்கள் தடுக்க முயன்றும் அவர்கள் தொடர்ந்து தாக்கிக் கொண்டனர். இதனை அங்கிருந்த ஒருவர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார்.
Next Story






