

தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த மாதம் (ஏப்ரல்) 23-ந் தேதி ஒரே கட்டமாக நடந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணியில் இருந்து எண்ணப்பட்டு வருகின்றன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. இதைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் கொளத்தூர் தொகுதியில் த.வெ.க. முன்னிலையில் உள்ளது. கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் பின்னடைந்துள்ளார். திமுக அமைச்சர்கள் கீதா ஜீவன், நாசர், முத்துசாமி, ரகுபதி உள்ளிட்ட அமைச்சர்களும் பின்னடைந்துள்ளனர்.
வில்லிவாக்கம் தொகுதியில் த.வெ.க. வேட்பாளர் ஆதவ் அர்ஜூனா முன்னிலையில் உள்ளார். திமுக வேட்பாளர் பின்னடைந்துள்ளார்.
எழும்பூர் தொகுதியில் தவெக வேட்பாளர் ராஜ்மோகன் முன்னிலையில் உள்ளார்.
தற்போதைய நிலவரப்படி த.வெ.க.-45, திமுக- 42, அதிமுக 33 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.