

சென்னை:
சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா செய்தியாளர்களிடம் கூறுகையில்,
* உள்துறை செயலகத்தின் அறிக்கை அடிப்படையில் ஆளுநர் மாளிகையில் முதலில் வந்தே மாதரம் பாடப்பட்டது
* திமுக ஆட்சியிலும் அதே நடைமுறையை ஆளுநர் கடைபிடித்தார். மு.க.ஸ்டாலின் முதல்வராக இருந்தபோது உயர்நீதிமன்ற நீதிபதிகள் பதவியேற்பு விழாவில் வந்தே மாதரம் முதலில் பாடப்பட்டது.
* மு.க.ஸ்டாலின் பங்கேற்ற விழாவில் தான் தமிழ்நாட்டில் முதன்முதலில் வந்தே மாதரம் முதலில் பாடப்பட்டது.
* தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாட வேண்டும் என முதலமைச்சர் வலியுறுத்தி இருந்தார்.
* தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாட வைப்பது பற்றி சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து வருகிறோம்.
* இருமொழி கொள்கையில் த.வெ.க. உறுதியாக இருப்பதாக அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்தார்.