சீமான் மீதான வழக்கை விரைந்து விசாரிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு

2010ல் இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் பேசியதாக சீமான் மீது வழக்குப் பதியப்பட்டது. இந்த வழக்கில் கடந்த 2018 ம் ஆண்டு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
சீமான் மீதான வழக்கை விரைந்து விசாரிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு
Published on

நாம் தமிழர் கட்சியினர் கடந்த 2010 ஆம் ஆண்டு தமிழ்நாடு மீனவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர்.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அந்த போராட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். இதனையடுத்து இரு சமூகத்தினரிடையே மோதலை உருவாக்கும் வகையிலும் இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் பேசியதாக சீமான் மீது வழக்குப் பதிவு செய்து அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

இந்த வழக்கு சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த நிலையில், கடந்த 2018 ம் ஆண்டு இந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி கடந்த 2021 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் சீமான் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், ஜோதிராமன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜ்குமார், இந்த வாசஹக்கில் 13 சாட்சியங்களிடம் விசாரணை முடிந்துள்ளது. ஆகவே வழக்கை ரத்து செய்யக் கூடாது என வாதிட்டார்.

பின்னர் சீமான் தரப்பில் ஆஜரான சங்கர், சாட்சிகள் விசாரணை தொடங்கி விட்டதால் நாங்கள் தொடர்ந்த இந்த வழக்கை திரும்ப பெறுவதாக தெரிவித்தார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் சீமான் மீது பதியப்பட்ட இந்த வழக்கை எவ்வளவு விரைவாக விசாரித்து முடிக்க முடியுமோ அவ்வளவு விரைவாக விசாரித்து முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com