என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    மீண்டும் ஒரு துயரச் சம்பவம் நிகழாமல் இருக்க.. வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கக் கோரி வழக்கு
    X

    மீண்டும் ஒரு துயரச் சம்பவம் நிகழாமல் இருக்க.. வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கக் கோரி வழக்கு

    • ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம்.
    • அக்டோபர் மாதம் 3-ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது. குறிப்பிடத்தக்கது.

    கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27-ந் தேதி நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானார்கள். 50-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகம் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவையே இந்த சோக சம்பவம் உலுக்கியது.

    இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

    கரூரில் 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணைப் பொதுச்செயலாளர் நிர்மல் குமார், கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் மதியழகன் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

    இந்நிலையில், கரூர் துயரம் போல் மீண்டும் ஒரு சம்பவம் நடைபெறாமல் தடுக்கும் வகையில், அரசியல் கட்சிகளின் 'ரோடு ஷோ' போன்ற நிகழ்ச்சிகளுக்கு வழிகாட்டி நெறிமுறைகளை வகுக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடக் கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது.

    சென்னை உயர் நீதிமன்றத்தில் தினேஷ் என்பவர் தொடர்ந்த இந்த வழக்கின் மீதான விசாரணை வரும் அக்டோபர் மாதம் 3-ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×