என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    எச்.ராஜாவை மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்தார் எல்.முருகன்
    X

    எச்.ராஜாவை மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்தார் எல்.முருகன்

    • எச்.ராஜாவை சந்தித்து அரசியல் தலைவர்கள் நேரில் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர்.
    • பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் நலம் விசாரித்தார்.

    சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்ற தனியார் செய்தி நிறுவனத்தின் நிகழ்ச்சியில் பங்கேற்ற பாஜக தலைவர் எச்.ராஜாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மேடையிலேயே அவர் மயங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதையடுத்து அவரை அங்கிருந்தவர்கள் பாலாஜி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் எச்.ராஜா அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு எச்.ராஜாவுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பல்லோ மருத்துவமனை சார்பில் நேற்று எச்.ராஜா உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், எச்.ராஜாவுக்கு பக்கவாதம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தொடர்ந்து, அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் எச்.ராஜாவை சந்தித்து அரசியல் தலைவர்கள் நேரில் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர்.

    அந்த வகையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன், நடிகர் ரஜினிகாந்த் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.

    இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவை மத்திய இணையமைச்சர் எல்.முருகன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

    இதுகுறித்து எல்.முருகன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "சென்னையில் உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வரும் பாஜக மூத்த தலைவர் பாசமிகு அண்ணன் எச். ராஜா அவர்களை, மருத்துவமனையில் சந்தித்தேன். அண்ணன் அவர்களின் உடல்நலத்தில், நல்ல முன்னேற்றம் இருப்பதில் பெருமகிழ்ச்சி.

    அவர் விரைவில் உடல் நலம் தேறி, மீண்டும் தேசப்பணிக்கு திரும்ப எல்லாம் வல்ல இறைவன் முருகபெருமானை வேண்டுகிறேன்" என்று தெரிவித்தார்.

    Next Story
    ×