மாமல்லபுரம் வந்த கொல்கத்தா டாக்டர் "திடீர்" உயிரிழப்பு

தனியார் கடற்கரை ரிசார்ட் ஒன்றில் ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த மருந்து கம்பெனி 2 நாட்கள் மருத்துவர்கள் சந்திப்பு கூட்டம் நடத்தியது.டாக்டர் புத்ததேஷ்வா உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மாமல்லபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மாமல்லபுரம் வந்த கொல்கத்தா டாக்டர் "திடீர்" உயிரிழப்பு
Published on

மாமல்லபுரம்:

மாமல்லபுரத்தில் உள்ள தனியார் கடற்கரை ரிசார்ட் ஒன்றில் ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த மருந்து கம்பெனி 2 நாட்கள் மருத்துவர்கள் சந்திப்பு கூட்டம் நடத்தியது. இதில் பங்கேற்பதற்காக கல்கத்தாவை சேர்ந்த டாக்டர் புத்ததேஷ்வா (வயது70) வந்திருந்தார். அவர் தனது அறையில் இருந்தபோது திடீரென இறந்தார்.

இதுகுறித்து மாமல்லபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com