கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: ஏப்ரல் 22-ந்தேதிக்கு ஒத்திவைப்பு

ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவம் நடந்தது.வழக்கை விசாரித்த நீதிபதி கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை ஏப்ரல் 22-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: ஏப்ரல் 22-ந்தேதிக்கு ஒத்திவைப்பு
Published on

ஊட்டி:

நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவம் நடந்தது. இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பான வழக்கு ஊட்டி கோர்ட்டில் நடந்து வருகிறது. இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது குற்றம் சாட்டப்பட்ட வாளையார் மனோஜ், ஜித்தின் ஜாய் கோர்ட்டில் ஆஜராகி இருந்தனர்.

வழக்கை விசாரித்த நீதிபதி கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை ஏப்ரல் 22-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். இந்த விசாரணையின் போது கொடநாட்டில் நடந்த புலன் விசாரணை தொடர்பான அறிக்கை எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை.

X

Maalai Malar
www.maalaimalar.com