சிவகங்கை, மதுரை மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் - தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை மாநகராட்சியின் இணை ஆணையராக இருந்த ஜெயசீலன் சுற்றுலாத்துறை இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
TN Assembly
Published on

தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதில்,

* மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்த ஆகாஷ் சிவகங்கை மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

* சிவகங்கை மாவட்ட ஆட்சியராக இருந்த நிஷாந்த் கிருஷ்ணா, மதுரை மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

* சென்னை மாநகராட்சியின் இணை ஆணையராக இருந்த ஜெயசீலன் சுற்றுலாத்துறை இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

* மாநகர போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குநர் பிரபுசங்கர், புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

* தமிழ்நாடு கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நிர்வாக இயக்குநராக இன்னசென்ட் திவ்யா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

* வணிக வரி இணை ஆணையர் பொன்மணி திருச்சி மண்டல அறநிலையத்துறை கூடுதல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

* சென்னை மாநகராட்சி இணை ஆணையராக ஸ்ரேயா பி சிங் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com