சென்னை கிண்டி அரசு மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள்

டாக்டர் மீது நடத்தப்பட்ட கத்திக்குத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்.அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தியும் டாக்டர்கள் கலைந்து செல்ல மறுப்பு.
சென்னை கிண்டி அரசு மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள்
Published on

கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவர் பாலாஜி என்பவரை சிகிச்சை பெற்று வந்த பெண்ணின் மகன் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா முழுவதும் மருத்துவர்களுக்கும் பணியின்போது பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என கொல்கத்தா ஆர்.ஜி. கெர் மருத்துவமனை சம்பவத்திற்கு பிறகு மருத்துவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் மருத்துவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் டாக்டர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் கிண்டி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவசர சிகிச்சையை தவிர்த்த மற்ற சிகிக்சைகள் அளிக்க மறுத்துவிட்டனர்.

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுடன் மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன் போரட்டம் நடத்திய டாக்டர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இருந்தபோதிலும் டாக்டர்கள் கலைந்த செல்ல மறுத்துவிட்டர்.

பல்வேறு கோரிக்கைகளை வலிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே கத்தியால் குதித்த விக்னேஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com