

விருதுநகர் மாவட்டம், கட்டனார்பட்டி அருகே உள்ள ‘வனஜா பட்டாசு ஆலை’ என்ற தனியாருக்கு சொந்தமான ஆலையில் இன்று மதியம் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் முதலில் 4 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில், தற்போது உயிரிழப்பு 6ஆக உயர்ந்துள்ளது.
விபத்தின் தாக்கத்தால் பட்டாசு ஆலையின் 4 அறைகள் முழுமையாக இடிந்து தரைமட்டமானதுடன், சுமார் 10 கி.மீ தூரம் வரை அதிர்வு உணரப்பட்டுள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீயைக் கட்டுப்படுத்தியுள்ளனர்.
காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.