கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தரை தட்டிய மிதவை கப்பலை மீட்கும் பணிகள் தீவிரம்

கூடங்குளம் அணுமின் நிலைய துறைமுகப் பகுதிகளின் நுழைவு வாயில் பகுதியில் பாறையில் சிக்கியது.காற்றின் வேகம் அதிகமாக இருந்ததினால் மீட்பு பணிகள் நிறுத்தப்பட்டன.
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தரை தட்டிய மிதவை கப்பலை மீட்கும் பணிகள் தீவிரம்
Published on

நெல்லை:

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 5 மற்றும் 6-வது அணு உலைகளுக்கான நீராவி உற்பத்தி கலன் ஏற்றி வந்த மிதவைக் கப்பல் ஆனது கூடங்குளம் அணுமின் நிலைய துறைமுகப் பகுதிகளின் நுழைவு வாயில் பகுதியில் பாறையில் சிக்கியது.

இதனை மீட்கும் பணிகள் நேற்று நடைபெற்றது என்றாலும் காற்றின் வேகம் அதிகமாக இருந்ததினால் மீட்பு பணிகள் நிறுத்தப்பட்டன. இந்த சூழ்நிலையில் இதற்கான வல்லுனர் குழுவினர் கூடங்குளம் அணுமின் நிலையம் வந்து உள்ளனர். அவர்கள் இதனை மீட்கும் பணியை இன்று காலை முதலே தொடங்கி உள்ளனர். பாறையில் சிக்கி உள்ள மிதவைக் கப்பலை இழுப்பதற்கு வல்லுநர் குழுவினர் 3 பரிந்துரைகளை செய்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த வல்லுனர் குழுவினர் கடல் பகுதிகளில் இதுபோன்ற கப்பல்கள் சிக்கும் பொழுது அதனை மீட்கும் பணியில் அனுபவம் பெற்றவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com