

சென்னையில் உள்ள அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு கூட்டம் தொடங்கியது.
சிபிஎம் அகில இந்திய பொதுச்செயலாளர் பேபி தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23ம் தேதி ஒரேகட்டமாக நடைபெறுகிறது.
திமுகவுடன் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வருகிறது.
மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் தலைமையில் மாநிலக்குழு கூட்டம் தொடங்கியுள்ள நிலையில், தொகுதி பங்கீடு குறித்து இறுதி முடிவு எடுக்க ஆலோசனை நடைபெறுகிறது.