சென்னையில் ரூ.20 கோடியில் நவீன வழிகாட்டி பலகைகள் அமைக்க மாநகராட்சி திட்டம்

தமிழ் தெரியாதவர்கள், வெளிமாநிலத்தவர்கள் கூட எளிதாக சாலைகளை அறிந்துகொள்ளும் வகையில் வழிகாட்டி பலகைகள் அமைக்கப்படுகிறது.
சென்னையில் ரூ.20 கோடியில் நவீன வழிகாட்டி பலகைகள் அமைக்க மாநகராட்சி திட்டம்
Published on

சென்னை:

சென்னையின் 300 முக்கிய சாலைகளில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் நவீன வழிகாட்டி பலகை அமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை மாநகரின் முக்கிய சாலைகளில் போக்குவரத்தை சீரமைக்க, விபத்தை தடுக்கும் வகையில் வழிகாட்டி பலகைகள் அமைக்கப்படுகிறது.

பள்ளி, விபத்து பகுதி, வேகத்தடை உள்ளிட்டவை குறித்து படம் மூலம் எச்சரிக்கும் வகையிலும், எழுத்துக்களை விட எளிதில் புரியக்கூடிய வகையில் படங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழ் தெரியாதவர்கள், வெளிமாநிலத்தவர்கள் கூட எளிதாக சாலைகளை அறிந்துகொள்ளும் வகையில் வழிகாட்டி பலகைகள் அமைக்கப்படுகிறது.

இரவு நேரங்களில் ஓட்டுநர்களுக்கு தெளிவாகத் தெரியும் வகையில் பலகைகளை அமைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com