என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    தொகுதி மறுசீரமைப்பு கூட்டம்- பவன் கல்யாண் கட்சி பங்கேற்பு
    X

    தொகுதி மறுசீரமைப்பு கூட்டம்- பவன் கல்யாண் கட்சி பங்கேற்பு

    • அழைப்பை ஏற்று கூட்டத்தில் பங்கேற்பதாக தலைவர்கள் உறுதி அளித்து இருந்தனர்.
    • ஆந்திராவில் பாஜக கூட்டணியில் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியும் உள்ளது.

    தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக நாளை சென்னையில் கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் நடைபெறுகிறது.

    இந்த கூட்டத்தில் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியும் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    கட்சி சார்பில் ஜனசேன கட்சியின் மக்களவை உறுப்பினர் உதய் சீனிவாஸ் கூட்டத்தில் பங்கேற்க உள்ளார்.

    ஆந்திராவில் பாஜக கூட்டணியில் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    முன்னதாக, இந்த கூட்டத்தில் பங்கேற்குமாறு தொகுதி மறுவரையறை செய்தால் பாதிக்கப்படும் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் அரசியல் தலைவர்களை சந்தித்து தி.மு.க. குழு அழைப்பு விடுத்தது. அழைப்பை ஏற்று கூட்டத்தில் பங்கேற்பதாக தலைவர்கள் உறுதி அளித்து இருந்தனர்.

    Next Story
    ×